2038 ஆம் ஆண்டு பூமியை தாக்கவுள்ள ஆபத்தான சிறுகோள்: நாசா அறிவிப்பு
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆபத்தான சிறுகோள் ஒன்று பூமியை தாக்கும் வாய்ப்பு 72 சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இராட்சத சிறுகோள்
பூமியை அவ்வப்போது கடந்து செல்லும் சிறுகோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இராட்சத சிறுகோள் பூமியை நோக்கி வரும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள் பூமியை தாக்கினால், அதனை அழிக்க அல்லது அதன் போக்கை மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்க இராணுவ தளபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |