அரசின் அதிரடி நடவடிக்கை! 3,902 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
குற்றவாளிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட 3,902 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.கே. வுட்லர் தெரிவித்துள்ளார்.
2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை குறித்த சொத்துக்கள் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 73 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சொத்துக்கள் பறிமுதல்
முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 354 பவுன் தங்க, 72 வாகனங்கள், 35 வீடுகள் மற்றும் சுமார் 37 ஏக்கர் நிலம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கூடுதலாக 67 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் அவற்றில் அடங்கும் என அவர் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri