இலங்கைக்கு கடனுதவியை அங்கீகரித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனை, தாம் அங்கீகரித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதிலும் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தநிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி, தனது நிதித்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி நிறுவனமயமாக்குவதன் மூலம் நாட்டை நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்த உதவுகிறது என்று வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காபியூமி கடொனொ தெரிவித்துள்ளார்.
நிதி உள்ளடக்கம்
இந்த துணை கடன் திட்டம், பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தும்.

அத்துடன், இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தவும் உதவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam