ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மகிந்த கட்சியின் விளம்பரத்தால் சர்ச்சை
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளம்பரத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி நேற்று(17.09.2023) கொழும்பில் நடைபெற்றது.
போட்டியின் ஒவ்வொரு ஓவர் முடிவிலும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி விளம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
மகிந்தவின் விளம்பரம்
இதனால் அதனை பார்வையிட்ட பார்வையாளர்கள் கடும் கோபத்தை வெளியிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
மேலும் போட்டியின் போது பொதுஜன பெரமுன தனது அரசியல் திட்டத்தின் பல விளம்பரங்களை ஒளிபரப்பியது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்சசை கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தம்மை பிரபலப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் மகிந்த அணியினரை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
