64 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்த ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது சர்க்கரை ஆராய்ச்சி தொழிற்சாலையின் அரைக்கும் செயற்பாடுகள் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் சர்க்கரை உற்பத்தி வரலாற்றில் இது ஒரு புதிய பக்கமாக திருப்பம் என்று கூறப்படுகிறது.
1961 ஆம் ஆண்டில், அதாவது கல்ஓயா வணிக திட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சர்க்கரை தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக நிறுவப்பட்டது.
முன்னணி தொழிற்சாலை
முன்னதாக நாட்டின் முன்னணி தொழிற்சாலையாக இருந்தநிலையில், காலப்போக்கில் பழுதடைந்தது.

இதன்பிறகு 15 ஆண்டுகள் மூடப்பட்ட பிறகு தொழிற்சாலை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தொழற்சாலையின், 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் முதலீட்டாளர்களிடமும் உள்ளன.
இந்த தொழிற்சாலை தினமும் இரண்டாயிரத்து ஐநூறு தொன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டது. மேலும், புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு ஐம்பத்து இரண்டாயிரம் மெட்ரிக் தொன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri