ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டெம்பர் 8 ஆரம்பம்
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 8 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) கூட்டம் வியாழக்கிழமை (24) டாக்காவில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) ஆரம்பத்தில் கூத்தில் பங்கு பற்ற எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் இணையத்தில் இணைந்து கொள்ள ஒப்புக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பங்கேற்கும் அணிகள்
இருப்பினும், முன்னைய அறிக்கைகளின்படி, போட்டி செப்டம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 2025 ஆசிய கிண்ணப் போட்டிகள் செப்டம்பர் 8 முதல் 28 வரை நடைபெறும் என்று ஊடக அறிக்கை கூறுகிறது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அதன் முழுமையான உறுப்பினர்களாகவும், ACC பிரீமியர் கிண்ணத்தை வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹொங்கொங் மற்றும் ஓமன் ஆகியவை ஏனைய மூன்று அணிகளாகவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளன.



