பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்: 150 கோடி நட்டஈடு கோரும் ஆசு மாரசிங்க
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க ஆசு மாரசிங்க, தனது சட்டத்தரணி ஊடாக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.
அவரது முன்னாள் காதலியான ஆதர்ஷா கரந்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடம் இருந்தே இந்ந நட்டஈட்டை கோரியுள்ளார்.
இதன்படி, பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தன ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
150 கோடி நட்டஈடு
ஹிருணிகா பிரேமச்சந்திர வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக சம்பவம் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஆசு மாரசிங்கவின் சட்டத்தரணி ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு, இரு தரப்பினரும் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து (டிச. 29) 14 நாட்களுக்குள் வழங்கத் தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 24 அன்று, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மாரசிங்க முறைப்பாடு செய்தார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளி
விலங்கை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை அவர் கடுமையாக நிராகரித்தார்,
அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர், மேற்கூறிய பெண் இயக்குநராக பணியாற்றும் தனது வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறில் கேள்விக்குரிய வீடியோ சிதைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
