கோட்டாபய விடுத்த உதவி கோரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எண்ணெய் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் பேசியதாக அமைச்சர் தெரிவித்தார்.

ரஷ்யா உட்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதற்காக பாடுபடுவேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராக மேற்குல நாடுகள் தடை விதித்துள்ளமையினால், ஆசிய நாடுகளுடான வர்த்தக நடவடிக்கையை ரஷ்ய தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்க பல நாடுகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்தியா அதிகளவான மசகு எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri