சிவாஜிலிங்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இராமநாதன் அர்ச்சுனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புலம்பெயர் தமிழர்கள் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூச்சலிடுவதாக சாவகச்சேரி நகரசபையின் உப நகர பிதா ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மருத்துவ செலவிற்கு சேகரிக்கப்படும் நிதி குறித்த இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பு
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவது குறித்து மிக மோசமான கருத்தை முன்வைத்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா இந்த மண்ணுக்கோ அல்லது மக்களுக்கோ ஒரு துளி கூட நன்மை செய்யாத ஒருவர். மக்களை ஏமாற்றி அரசியலுக்கு வந்து புலம்பெயர் மக்களிடம் கோடிக்கணக்கான நிதியை திரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றவர் இராமநாதன் அர்ச்சுனா.
ஆகவே அவர் தன்னைப்போல் மற்றவர்களையும் சிந்திக்கின்றார். புலம்பெயர் தேசங்களில் இருந்து சிவாஜிலிங்கத்திற்கு நிதி அனுப்பினால் தனக்கு நிதி கிடைக்காது என்ற கோபத்தில் அவர் இவ்வாறான மோசமான வேலைகளை செய்கிறார்.
இராமநாதன் அர்ச்சுனா, வெளிநாட்டுக்குச் சென்று அங்கே நின்று எமது மண்ணையும், எமது இளைஞர்களையும் விற்கின்ற வகையில் கருத்து தெரிவித்தபோது நாங்கள் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.
அதாவது எமது யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு தயாரா என்று நாம் கேட்டிருந்தோம். அவர் வரவில்லை. அவருக்கு முதுகெலும்பு இல்லாததால் தான் விவாதத்திற்கு வரவில்லை. மீண்டும் நாங்கள் கேட்கின்றோம் அர்ச்சுனா இராமநாதனுக்கு துணிவு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள். நீங்கள் சொல்கின்ற இடத்திற்கு எமது இளைஞர்கள் வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
முன்வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகள்
அத்துடன் மேலும் ஒரு பகிரங்க கோரிக்கையை முன்வைக்கிறோம். முடிந்தால் இன்னொரு தடவை தமிழக மண்ணில் கால் வையுங்கள் பார்ப்போம். நீங்கள் முதுகெலும்பு உள்ள ஒரு ஆளாக இருந்தால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் சம்மதியுங்கள் பார்ப்போம்.
தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிவிட்டார்கள். அந்த வாழ்க்கையை ருசித்துக் கொண்டு மீண்டும் முதலமைச்சர் ஆகுவதற்கு பகல் கனவு காணுகின்றார்.
அமிர்தலிங்கம், தந்தை செல்வா உள்ளிட்ட கல்விமான்களின் வழிவந்த எமது அரசியலானது தற்போது அர்ச்சுனா போன்றவர்களால் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருப்பது எமக்கு வெட்கக்கேடாக இருக்கின்றது.
அர்ச்சனா இராமநாதன் என்ற ஒருவரை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வைத்தியர் என்ற பெயரில் இருக்கின்ற இந்த விஷச்செடியினை அறிமுகப்படுத்தியதற்காக எமது மக்களிடம் நாங்கள் பகிரங்க மன்னிப்புகோருகின்றோம்.
சிவாஜிலிங்கம் குறித்து அர்ச்சுனா என்கின்ற விஷக்கிருமி ஏதாவது கருத்துக்கள் முன்வைத்தால் நடப்பது வேறு. இதனை பகிரங்க எச்சரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். எந்த பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிட்டாலும் பிரச்சினை இல்லை.
சிவாஜிலிங்கம் இரண்டு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை விடுதலை போராட்டத்திற்காக வழங்கியவர். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் சொகுசாக வாழவில்லை.
2013ஆம் ஆண்டு சிவாஜிலிங்கம் நினைவேந்தலில் ஈடுபடும்போது இராணுவத்தினர் அவரை சூழ்ந்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் பெரிய கோவிலில் நினைவேந்தலில் ஈடுபடுகின்றபோது இராணுவத்தினர் அங்கே வந்த அந்த சுடர்களை கால்களால் தட்டி அவமானப்படுத்தினார்கள்.
கெடுபிடியான நேரத்திலும் நினைவேந்தல்
அன்று இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் மத்தியில் மாகாணசபை வளாகத்தினுள் தனி ஒருவராக நின்று நினைவேந்தலை மேற்கொண்டவர். இன்று நாங்கள் தேசியத்தலைவரின் பிறந்த நாளுக்கு பகிரங்கமாக கேக் வெட்டுகின்றோம். ஆனால் அன்று கெடுபிடியான நேரத்திலும் கேக் வெட்டியவர் தான் சிவாஜிலிங்கம்.
இறுதி நேரத்தில் தேசியத்தலைவரின் தாயாரது மருத்துவ விடயங்கள், இறுதிச்சடங்கினை சிவாஜிலிங்கம் தான் நடாத்தினார். தமிழ் தேசியத்துக்காக இவை அனைத்தையும் துணிந்து செய்தவருக்கு எதிர்பார்த்த அளவு நிதியை விட அதிகமான நிதி கிடைக்க வேண்டும்.
இன்றைக்கு அவர் இந்த நிதியை கேட்டிருக்கமாட்டார். அவருடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதாலேயே அவர் இதனை கேட்டுள்ளார்.
அவரது மருத்துவ செலவுக்கு மாத்திரமன்றி அவரது பராமரிப்பு செலவுக்கும் தேவையான நிதி கிடைக்க வேண்டும். எனவே அவருக்கு கிடைக்கின்ற நிதி குறித்து யாரும் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 20 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam