ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கோரும் கலைஞர்கள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கலைஞர்கள் சிலர் ஒன்றிணைந்துள்ளனர்.
ரஞ்சன் மற்றும் எமது கலை கூட்டணி என்ற அமைப்பு இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.