நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சூரிய புர மற்றும் தோப்பூர் பகுதிகளில் நகைகளை கடத்த முயன்றதாக கூறப்படும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் சூரிய புர பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து 60 இலட்சம் நகைகளை கடத்திச் சென்ற ஒருவரை நேற்று (23.01.2023) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்த முச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
அதேவேளை, கந்தளாய் தோப்பூர் பகுயில் 50 இலட்சத்துக்கும் பெறுமதியான நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரின் கையில் மறைத்து வைத்திருந்த பை குறித்து சந்தேகமடைந்த பொலிஸார், அதை சோதனையிட்டபோது தங்க ஆபரணங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டு சம்பவத்துடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பின்னர் மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
