சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து வைத்திருந்த மூவர் கைது
சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 476 லீற்றர் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர்
யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 500 லீற்றர் டீசல், 306 லீற்றர் பெட்ரோல் மற்றும் 1,670 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான எரிபொருள் சேமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள்
மயிலங்காடு, சுன்னாகம் மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுபவர்களை
கண்காணிப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.