கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேர் பாம்பன் துறைமுகத்தை அடைந்தனர்

Indian fishermen India Rameswaram
By Theepan Nov 19, 2023 04:02 PM GMT
Report

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி கடற்தொழிலாளர்கள் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகத்தை சென்றடைந்துள்ளனர். 

கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கவிருந்த நடவடிக்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இரவு மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தி பின் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருந்த நேரத்தில், நேற்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடற்தொழிலாளர்கள் குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிச் சொல்லியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேர் பாம்பன் துறைமுகத்தை அடைந்தனர் | Arrested Fishermen From Rameswaram Pampan Area

இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் நள்ளிரவில் 11.30 மணியளவில் சிறைபிடிக்கப்பட்ட 22 கடற்தொழிலாளர்களையும் இரண்டு நாட்டுப்படகுடன் விடுவிக்க இலங்கை கடற்படை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்களையுமு் படகுகளையும் சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சர்வதேச எல்லை கடலில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் 22 கடற்தொழிலாளர்களையுமு் படகுகளுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல் படையினர் கடற்தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல கூறிய நிலையில் இன்று பகல் 1 மணியளவில் அவர்கள் பாம்பன் துறைமுகம் வந்தடைந்துள்ளனர். 

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

கடற்தொழிலாளர்கள் கூறும் விடயம்

விடுவிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கூறும் பொழுது, இரண்டு நாட்களாக கடலில் மழை திசை தெரியவில்லை. ஆகவே இலங்கை கடல் பகுதிக்குள் தெரியாமல் சென்று விட்டோம்.

அத்துடன் இதனை இலங்கை கடற்படையிடம் சொன்ன போதும் அவர்கள் கேட்கவில்லை. ஆகவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேர் பாம்பன் துறைமுகத்தை அடைந்தனர் | Arrested Fishermen From Rameswaram Pampan Area

அப்போது திடீரென நள்ளிரவில் நீங்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் உங்கள் அரசு விடுவிக்க சொல்லி இருக்கு என கூறியதால் மகிழ்ச்சி அடைந்தோம்.

அதன் பின் இலங்கை கடற்படை எங்களை பாதுகாப்போடு அழைத்து வந்து இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.

நாங்கள் வரும்பொழுது காற்று மழை காரணமாக காலதாமதம் ஆகி தற்போது தான் வந்து சேர்ந்தோம். எங்களையும் எங்கள் படகுகளையும் விடுவித்த இந்திய அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ள ரொஷான் : ஜனவரி ஏற்படவுள்ள மாற்றம்

விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ள ரொஷான் : ஜனவரி ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US