அனுமதிப்பத்திரமின்றி பனைமரங்களை ஏற்றி வந்த 6 பேர் கைது (Photos)
அனுமதிப்பத்திரமின்றி கெப்ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றி வந்த 6 பேரை இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காரைநகர், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
பனைமரம் கடத்தல் குற்றச்சாட்டு
வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்த நிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.
எனவே வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மரங்களை கடத்திய குற்றச்சாட்டின் கீழும், ஏனைய ஐவரும் சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.