ராணுவத்திற்கு கட்டளையிடும் அதிகாரத்தில் ஆட்சியாளர்கள் இல்லை:சபையில் பகிரங்கம்(Video)
இலங்கை பொருளாதார கொள்கை உடைய நாடக இல்லாமல் ஆட்சியாளர்கள் ராணுவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய எழுதப்படாத ஒரு கொள்கையுடன் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(24.11.2022) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ராணுவ கொள்கையுடன் ஆட்சியாளர்கள் பயணிக்கிறார்கள் அதனால் தான் 410 பில்லியன் ரூபா ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெரும் தொகை பணத்தை ஒதுக்கியுள்ளது.
இலங்கை பொருளாதார கொள்கை உடைய நாடக இல்லாமல் ஆட்சியாளர்கள் ராணுவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய எழுதப்படாத ஒரு கொள்கையுடன் இருக்கின்றது.
இது இலங்கையின் பொருளாதார நிலமையை மேலே கொண்டுவருவதற்கான ஒரு ஆக்கபூர்வ செயற்பாடு அல்ல”என கூறியுள்ளார்.
இது தொடர்பான சார்ள்ஸ் நிர்மலநாதனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam