ராணுவத்திற்கு கட்டளையிடும் அதிகாரத்தில் ஆட்சியாளர்கள் இல்லை:சபையில் பகிரங்கம்(Video)
இலங்கை பொருளாதார கொள்கை உடைய நாடக இல்லாமல் ஆட்சியாளர்கள் ராணுவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய எழுதப்படாத ஒரு கொள்கையுடன் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(24.11.2022) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ராணுவ கொள்கையுடன் ஆட்சியாளர்கள் பயணிக்கிறார்கள் அதனால் தான் 410 பில்லியன் ரூபா ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெரும் தொகை பணத்தை ஒதுக்கியுள்ளது.
இலங்கை பொருளாதார கொள்கை உடைய நாடக இல்லாமல் ஆட்சியாளர்கள் ராணுவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய எழுதப்படாத ஒரு கொள்கையுடன் இருக்கின்றது.
இது இலங்கையின் பொருளாதார நிலமையை மேலே கொண்டுவருவதற்கான ஒரு ஆக்கபூர்வ செயற்பாடு அல்ல”என கூறியுள்ளார்.
இது தொடர்பான சார்ள்ஸ் நிர்மலநாதனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri