சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் ஒருவர் எடுத்த விபரீத முடிவு (Photos)
இளம் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளவத்தை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனின் தகவல்
இது குறித்து எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தொடர்புகொண்டு கேட்ட போது,
குறித்த இராணுவ வீரர் தனது பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டவர் எனவும் இருப்பினும் தனக்கும் தனது வீட்டிற்கும் இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இருந்த போதும் குறித்த இராணுவவீரர் உட்பட்ட இராணுவ குழுவினர் தனது வீட்டில் இருந்து சில வீடுகள் தள்ளி வீதிப் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தற்கொலை செய்து கொண்ட இராணுவவீரருக்கும் தனக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என முன்னரே மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
