யாழில் மணல் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடாத்திய இராணுவத்தினர்
யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல் காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது தப்பியோடியுள்ளனர்.இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.