யாழில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி
யாழ்ப்பாணம் கிளிநொச்சி அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் கட்டளை பணியத்தின் ஏற்பாட்டில் "PALMYRA CHALLENGE 2024 " கிரிக்கெட் சுற்று போட்டி இடம்பெற்றது.
குறித்த போட்டியானது நேற்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் ஜீனியஸ் அணிக்கும் கிளிநொச்சி ஜீனியஸ் அணிக்கும் இடையிலான. கிரிக்கெட் போட்டி மங்கள. விளக்கேற்றி நாணய சுழற்சியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்வு
இந்நிகழ்வில் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியானகே, பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, வட மாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் S. சிறிசற்குணராஜா, கிளிநொச்சி யாழ் மாவட்ட ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் கிளிநொச்சி ஜீனியஸ் அணி வெற்றி பெற்றது.
பங்குபற்றிய அணிகள் இரண்டிற்குமான பரிசளிப்பு நிகழ்வு இராணுவத் தளபதியின்
பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது