வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர்: கொடுக்கப்பட்ட பதிலடி
வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் அவரது இல்லத்தில் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டித்திருந்தார்.
இதன்போது உழவு இயந்திரத்தில் வந்த இராணுவத்தினர் அவரது வீட்டுக்குள் புகுந்து சுடர் ஏற்றிய இப்படியான தொடர்பில் விசாரணை நடாத்தினர்.
அதற்கு அவர் "நான் என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை" என இராணுவத்தினருக்குப் பதிலடி கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினமான நேற்றையதினம், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |