வடக்கில் அரச காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலம் (Video)

Sri Lanka Army Mullaitivu Sri Lanka Politician Sri Lanka Podujana Peramuna K. Kader Masthan
By Sheron May 10, 2023 11:36 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு பிரஜைகளுக்கு ஒரு சிப்பாய் வீதம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை சட்டப்பூர்வமாக உரிமையாக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலமாகியுள்ளது.

அரசின் மற்றொரு திணைக்களத்திற்கு அவசியமான காணியையே இவ்வாறு கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் 64ஆவது பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணியை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக சுவீகரிக்கும் முயற்சியை மேற்கொண்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் அரச காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலம் (Video) | Army Attempt To Seize Government Lands

பிரதேச செயலாளரின் அங்கீகாரம்

கடந்த வார இறுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே. காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பி.ஜெயராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்தச் சந்திப்பின்போது இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் தர அதிகாரி ஒருவர், இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானிடம், யுத்தம் முடிவடைந்த பின்னர், 64ஆவது பிரிவு நிறுவப்பட்ட காணியின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு பிரதேச செயலாளரின் அங்கீகாரம் தேவை என கோரினார்.

"ஐயா, காணிப் பிரச்சினை ஒன்று உள்ளது. 64ஆவது பிரிவு இடம். 2009 முதல் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் கையகப்படுத்தப்படவில்லை." 64ஆவது பிரிவு அமைக்கப்பட்டுள்ள காணிக்குப் பதிலாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வேறு காணியை வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் அரசியல்வாதியிடம் இராணுவ அதிகாரி தெரிவித்த கருத்து உண்மையல்ல என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் அரச காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலம் (Video) | Army Attempt To Seize Government Lands

முக்கியமான இடம்

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 25 ஏக்கர் காணிக்குப் பதிலாக வேறு காணியை இராணுவம் வழங்கியதாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இராணுவ அதிகாரி தெரிவித்த கருத்தை மறுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பணிப்பாளர், 64ஆவது படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடம், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு மிக முக்கியமான இடம் என தெரிவிக்கின்றார்.

பிரதேசத்தில் நீர்ப்பாசனப் பணிகளுக்காகத் தயார்ப்படுத்தப்பட்ட இடம் என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விஹிர்தன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியசாலை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு அது முக்கியமான இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

64ஆவது பிரிவு அமைக்கப்பட்டுள்ள காணி தமது திணைக்களத்திற்கு சொந்தமாக இருந்த காலத்தில் விவசாய பிரதேசமான முல்லைத்தீவில் உள்ள அனைத்து குளங்களையும் தம்மால் இலகுவாக நிர்வகிக்க முடியுமாக இருந்ததாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்தில் இருந்தும் விவசாயிகள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு ஏற்ற இடமாக இது காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் நீர்ப்பாசன திணைக்களத்துடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்குமாறு, இராணுவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பி.ஜெயராணி குறிப்பிட்டுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US