அர்ஜுன் அலோசியஸ் செலுத்தாத வரி நிலுவை
பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், சுமார் மூன்றரை பில்லியன் ரூபா அளவிலான வரி நிலுவையை இதுவரை செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
டப்.எம்.மெண்டிஸ் சாராய உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மூன்றரை பில்லியன் ரூபா வட் வரிநிலுவையை செலுத்தத் தவறிய காரணத்துக்காக அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக கடந்த ரணில் ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதன்பிரகாரம் வரி நிலுவையை செலுத்தத் தவறிய காரணத்துக்காக அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்க்கமான வழிகாட்டல்
தற்போது அர்ஜுன் அலோசியஸ் சிறைத்தண்டனையை முடித்து விடுதலையாகிவிட்டார். எனினும், இதுவரை அவர் குறித்த வட் வரித் தொகை நிலுவையைச் செலுத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றிடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ள போதும், இதுவரை அது தொடர்பில் தீர்க்கமான வழிகாட்டல் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam