தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
கடந்த வருடம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொது செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை இன்று எடுத்துக் கொண்ட மாவட்ட நீதவான் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை திகதியிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்