சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட குழு நியமிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்றி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri