இலங்கை இராணுவத்தின் 24 வது பிரிவின் புதிய தளபதி நியமனம்
இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24ஆவது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா பதவியேற்றுள்ளார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வானது நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது.
24ஆவது பிரிவிற்கு வந்தடைந்த புதிய பிரிவு தளபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் மகா சங்கத்தின் பிரித் சத்காயனா பின்னர் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
வாழ்த்துக்கள்
.இதன்பின்னர் 24ஆவது பிரிவு வளாகத்தில் இராணுவ தளபதியினால் மரம் நடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 24ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள படையணிகளின் பிரிவுத் தளபதிகளும் கலந்து கொண்டு புதிய பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |