அனுரகுமார திஸாநாயக்கவால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: ஆய்வில் வெளியான தகவல்
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 பேர் தெரிவித்துள்ளனர்.
36.6% பேர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கடியைத் தீர்க்கும் திறன் இருப்பதாக நம்புகிறார்கள்,
அதே நேரத்தில் 29.1% பேர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.
23.7% பேர் டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்,
மேலும் 18.3% பேர் பிரதமர் தினேஷ் குணவர்தன பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.
மேலும் 11.9% பேர் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர் என்று
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
