அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள்

Sri Lanka Police Anuradhapura Women
By Vethu Mar 14, 2025 01:12 PM GMT
Report

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

“நான் மதியம் 3:30 மணியளவில் வேலையிலிருந்து வீடு திரும்பி, விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு, நான் ருவன்வெளி மஹா சேயவிற்கு வழிபடச் சென்றேன்.

வானில் தோன்றிய அதிசய இரத்த நிலவு

வானில் தோன்றிய அதிசய இரத்த நிலவு

மாலை சுமார் 6:30 மணியளவில் நான் விடுதிக்கு திரும்பினேன். நான் என் விடுதி அறைக்குள் நுழையப் போகும் போது, ​​யாரோ என் பின்னால் வருவது போல் உணர்ந்தேன். ​​

நடந்த கொடுமைகள்

என் அறைக்கு எதிரே உள்ள அறையின் வாசலில் இருந்த ஒருவர் என் கழுத்தில் கத்தியை வைத்து கதவைத் திறக்கச் சொன்னார். நான் கதவைத் திறந்தவுடன், அவர் என்னைத் தள்ளிவிட்டு, ஒரு டி-ஷர்ட்டால் என் வாயை மூடினார்.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

பின்னர் என் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை போட்டு, எல்லா இடங்களிலும் பார்த்தார். பிறகு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு குளியலறை விளக்கை மட்டும் போட்டார்.

நான் இராணுவத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன். பொலிஸார் என்னைத் தேடுகிறார்கள். சிறிது நேரம் மறைந்திருக்க அனுமதிக்குமாறு கேட்டார். இங்கேயே இருக்க விடுங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் என்றார். ஆனால் கத்தினால் தொண்டையை அறுத்துவிடுவேன் என கூறினார்.

அவர் என் அருகில் அமர்ந்து, என கைகளை முன்னோக்கி நீட்டுமாறு கூறி கட்டி வைத்தார். வாயை ஒரு துணியால் மூடினார். எனது கையடக்க தொலைபேசியை வழங்குமாறு கேட்டார்.

என் தொலைபேசியை எடுத்து, எனக்காக ஒரு இந்தி பாடலை போடுமாறு கேட்டார். நான் பாடலை போடாமல் அவருடன் போராடினேன். எனது கையில் கத்தி வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் படிவம்- வவுனியாவில் விநியோகம்

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் படிவம்- வவுனியாவில் விநியோகம்

கொலை மிரட்டல்

அவர் என்னைக் கொன்றுவிடுவார் என பயந்து அவர் சொன்னதை நான் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

அவர் அனைத்தை முடித்துவிட்டு எனது தொலைபேசியிலேயே என்னை புகைப்படம் எடுத்தாார். நான் கைடயக்க தொலைபேசியை கொண்டு செல்கிறேன். நடந்த விடயங்களை வெளியே கூறினால் உங்களுக்கு தான் பிரச்சினை மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

என் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நான் அவற்றை அவிழ்த்த போது, ​​அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. ஒரு ஜன்னல் திறந்திருந்தது.

அசௌகரியத்தைத் தாங்க முடியவில்லை, அதனால் நான் குளித்தேன், பின்னர் விரைவாக மருத்துவரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அவரும் தனது தந்தையிடம் தொலைபேசியில் கூறினார்.

பின்னர் சம்மாந்துறை மருத்துவமனையில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் கூறினார்." இதற்கிடையில், சந்தேக நபரைத் தேடி 5 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன.

கல்னேவ பகுதியில் நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் சிறப்பு மருத்துவரை பாலியல் சீண்டல் செய்த 34 வயது சந்தேக நபரை விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

இதேவேளை, சந்தேக நபர் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

இந்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரின் மூத்த சகோதரியும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை அனுராதபுரம் போதனா மருத்துவமனை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ விடுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து 32 வயதுடைய பெண் பயிற்சி மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு அவரை மிரட்டி பாலியல் சீண்டல் செய்துள்ளார்.. பின்னர் சந்தேக நபர் மருத்துவரின் கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றார். தொலைபேசி சிக்னல்களின் அடிப்படையில் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர் இலங்கையை விட்டு வெளியேற தடை

பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர் இலங்கையை விட்டு வெளியேற தடை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US