நாட்டில் நிலவும் கறுப்பு பொறிமுறை அழிக்கப்படும்! அநுர எச்சரிக்கை
ஒரு சிலரால் வழிநடத்தப்படும் அந்த கறுப்பு பொறிமுறையை அழிக்க நிச்சயமாக பாடுபடுவேன் என ஜனாதிபதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 'தேசிய வரி வார' தொடக்க விழாவில் உரையாற்றியபோதே இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
மாத்தறை சிறைச்சாலை
சமீபத்தில், மாத்தறை சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளின் போது, கைதிகளை அங்குணகொலபலாஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றும்போது, அவர்களிடம் இருந்து 7 கைவிலங்குகள் மற்றும் கைவிலங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் 28 சாவிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டில் மேலோட்டமான வெள்ளை அமைப்புகளுக்குக் கீழே ஒரு கறுப்பு அமைப்பு இயங்குகிறது என்பது உண்மை.
இருப்பினும், ஒரு சிலரால் வழிநடத்தப்படும் அந்த கறுப்பு பொறிமுறையை அழிக்க நிச்சயமாக பாடுபடுவேன்” என கூறியுள்ளார்.
