அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட துன்புறுத்தல் முகாம்கள்! சபையில் வெளியான தகவல் (Video)
1988/89 காலப்பகுதியில் அமைச்சர்களின் வீடுகளில் துன்புறுத்தல் முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதுடன், எதிர்த்தரப்பினர் பெயர் பட்டியல் மூலம் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்றும், அதேபோன்ற நிலைமை மீண்டும் உருவாகின்றதா என்ற கேள்விகள் காணப்படுவதாகவும் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மே 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதன் பின்னரான வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், விசேடமாக நாங்கள் அரசியல் இயக்கம் என்ற ரீதியில் இந்த அரச பயங்கரவாதத்தினால் வேண்டியளவிற்கு பாதிக்கப்பட்ட தரப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,