ஏதாவது ஓர் வழியில் இந்த வருடம் ஆட்சி கைப்பற்றப்படும் : அனுரகுமார சீற்றம்
ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள தயார்.
பயனற்ற அபிவிருத்தி திட்டங்கள்
மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான தீர்க்கமான ஓர் போர் நடைபெறுகின்றது. மக்கள் இந்தப் போரிலிருந்து பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த போரை வெற்றிகொள்வோம்.
ஹம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார்.
"துறைமுகம் அமைத்தார் கப்பல் இல்லை, மைதானம் அமைத்தார் போட்டிகள் இல்லை, சிறைச்சாலை அமைத்தார் அது நிரம்பியுள்ளது. இந்தக் கள்வர் கூட்டம் பயன்படுத்தும் வாகனங்கள் நாட்டுக்கு தாக்கு பிடிக்கக் கூடியதல்ல.
இவர்களின் வாகனங்கள் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இரண்டு மூன்று கிலோமீற்றர் மட்டுமே பயணிக்கக்கூடியவை. ரணிலின் வாகனம் 3000 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடிப்போம். நேரடியாக கூறினால் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம்" என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 37 நிமிடங்கள் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
