மூன்று முக்கிய இராணுவ அதிகாரிகளை நீக்கும் கட்டாயத்தில் அநுர
அமெரிக்கா சார்ந்த அல்லது இந்தியாவுடன் அனுசரணைப் போக்குடன் செயற்படக்கூடிய மூவரை இலங்கையின் இராணுவ கட்டமைப்பில் இருந்து நீக்கும் கட்டாயம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு உள்ளது.
முதலாவதாக கமல் குணரத்ன, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனே தனது பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து தானாகவே பின்வாங்கினார்.
இரண்டாவதாக, அநுர அரசாங்கத்தினால், அரச புலனாய்வுப் பணிப்பாளராக கடமையாற்றிய சுரேஷ் சலே தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மூன்றாவது, இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தனது இருப்பை வெளிக்காட்டாமல் உள்ளார். முன்னர் அதிகமாக ஊடங்களில் வெளிவந்த அவரது பெயர் தற்போது காணாமல் போயுள்ளது.
குறித்த இராணுவ மறுசீரமைப்புகள் எவ்வளவு தூரம் தொடரும் என்பது அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri