கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின் பெர்னாண்டோ
ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஈஸ்டர் தாக்குதல் பற்றி நாங்கள் சொன்ன விடயத்தைக் கூட கூறவில்லை.
கோட்டாபயவுக்கு பயந்துதான் அன்று இருந்தார்கள்.நான் நாடாளுமன்றத்தில் “சொனிக் சொனிக்” கதையைக் கூறியதற்காக என்னை கைது செய்ய உத்தரவிட்டார்கள் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..
அன்று எனக்கு நடந்த கொடுமைகள்
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக ஒருவரைக் கைது செய்ய முடியாது. பழைய வழக்குகளைப் போட்டு என்னை அவ்வளவு துன்புறுத்தினார்கள்.
நல்ல வேளை அது ஒரு கெட்ட கனவு போல கடந்து போனது. அந்த நாட்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும்,அதுதான் உண்மை. ஈஸ்டர் தாக்குதல் நடத்துவதற்கு உள்ளார்ந்த நோக்கம் ஒன்று இருக்கிறது என்று நான் இன்னும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
அன்று நாங்கள் இந்தத் தகவல்களுடனும் பெயர்களுடனும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்களிடம் சென்றபோது,அவர்கள் எனக்குத் தந்த பதில் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
'அப்போது பதவியில் இருந்த சலே பற்றி ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம்' என்று என்னை திட்டினார்கள். ஆனால் இன்று சலே சந்தேக நபராக இருக்கிறார்.அன்று நாங்கள் இந்த உண்மைகளைப் பேசும்போதும்,

சலே குற்றவாளி என்று நாங்கள் கூறவில்லை.நாங்கள் கூறியது என்னவென்றால்,இப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் என்றுதான்.
எங்களுக்குக் கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் (Sources) அடிப்படையில்தான் நாங்கள் அந்த விமர்சனங்களைச் செய்தோம்.
நான் கூறிய எந்தவொரு விடயமும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களில் கூறப்பட்ட விடயங்களுக்குப் புறம்பானவை அல்ல.
ராஜபக்சவுக்கு பயமில்லாமல் பேசிய எங்களுக்கு, இந்த அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பொருட்டல்ல.ஏனென்றால், கோட்டாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்புப் தொடர்பில் நல்ல பலம் இருந்தது, அவரால் முடிவுகளை எடுக்க முடிந்தது.
இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களின் பேச்சுகளுக்கு பயந்து நாம் வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்.