அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலானது, நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தொடர்ச்சியான மற்றும் மலிவு விலையில் அரிசி வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உடனடி நடவடிக்கைகளை
இந்த இலக்கை அடைவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை அடையாளம் காணுமாறு அவர் ஆலை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், அரிசி தட்டுப்பாட்டைத் தடுக்கவும், நிலையான அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும் நாடு முழுவதும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், உர மானிய விநியோகத்தை சீரமைக்கவும் உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் QR குறியீடு முறையை அறிமுகப்படுத்துவதன் சாத்தியமான நன்மைகளை ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.


புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri