செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Senthil Thondaman Vadivel Suresh
By Dharu Jan 22, 2025 08:03 AM GMT
Report

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களில் பலவந்தமான முறையில் வசித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன(samantha widyaratne) முன்வைத்த கருத்துக்களில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 


“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

பெரிய மோசடி

இது ஒரு பெரிய மோசடி பற்றிய அறிக்கைகளுக்கு வழிவகுத்தது. தற்போது, ​​விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடிக்கு இறுதிப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது கடினம்.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

இருப்பினும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் ஊழல்வாதிகள் தற்போது திணறுகிறார்கள். 

முன்னாள் அமைச்சர், ஒருவர் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பில் முறையற்ற கருத்துக்களை உரத்த குரலில் பேசினார். இவரை பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவர் பதுளை தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தி மன்னிப்பு கோர செய்து மண்டியிட வைத்தவர் இந்த சம்பவம் தொடர்பில் அந்த அதிபர் 2018.01.03 ஆம் திகதி காலப்பகுதியில் பொலிஸ் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நபர் கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். எப்பாவெல தொழிற்சாலைக்கு சென்று அங்கிருந்த உத்தியோகஸ்த்தர்களை தாக்கினார்.

முறையற்ற வகையில் செயற்பட்டு, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 786 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் கலக்கமடைந்து உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள்.

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் எனக்கு பெயர் குறிப்பிடாத கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அக்கடிதத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களை அரசியல்வாதிகள் பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் தற்றுணிவு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கடந்த காலங்களில் ஜனாதிபதி, அமைச்சர் என்று பலருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது'

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

பெயர் குறிப்பிடப்படாத கடிதத்தால் நான் அதனை பெரிதாக கவனத்திற் கொள்ளவில்லை. இருப்பினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயுமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினேன்

.அதற்கமைவாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டம் எட்டபிட்டிய திக்வெல்ல ' டிஸ்லேன்ட்' பங்களாவில் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமான முறையில் இருந்துள்ளார்.

அதேபோல் கடந்த அரசாங்கத்தில் ஆளும் மற்றும் எதிர் என்று அனைத்து பக்கங்களிலும் இருந்த வடிவேல் சுரேஸ் பதுளை ஹாலி எல பகுதியில் பெருந்தோட்டத்துக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 19 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

உண்மையை அறியாத மக்கள்

ஆனால் இவ்விருவரும் தமது சொந்த பங்களாவில் வாழ்வதாக தான் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டார்கள். அவர்களும் உண்மையை அறியவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

இதற்கமைய செந்தில் தொண்டமானுக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ' தற்போதைய அரசாங்கத்திடம் ஏதும் முடியாது.' என்று குறிப்பிட்டுக் கொண்டு பங்களாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

19 ஆண்டுகளாக வசிக்கும் பங்களாவில் தனக்கு சட்ட உரிமை உள்ளது என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டு 1 வாரம் காலவகாசம் கோரியிருந்தார். அவருக்கு காலவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது உரிமையை நிரூவிக்கவில்லை. பின்னர் பங்களாவில் இருந்து வெளியேறினார்’’ என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

29 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உமையாள்புரம்

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Herning, Denmark, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

31 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கோப்பாய் தெற்கு

30 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முள்ளியான், Scarborough, Canada

29 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
நன்றி நவிலல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US