செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Senthil Thondaman Vadivel Suresh
By Dharu Jan 22, 2025 08:03 AM GMT
Report

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களில் பலவந்தமான முறையில் வசித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன(samantha widyaratne) முன்வைத்த கருத்துக்களில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 


“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

பெரிய மோசடி

இது ஒரு பெரிய மோசடி பற்றிய அறிக்கைகளுக்கு வழிவகுத்தது. தற்போது, ​​விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடிக்கு இறுதிப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது கடினம்.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

இருப்பினும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் ஊழல்வாதிகள் தற்போது திணறுகிறார்கள். 

முன்னாள் அமைச்சர், ஒருவர் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பில் முறையற்ற கருத்துக்களை உரத்த குரலில் பேசினார். இவரை பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவர் பதுளை தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தி மன்னிப்பு கோர செய்து மண்டியிட வைத்தவர் இந்த சம்பவம் தொடர்பில் அந்த அதிபர் 2018.01.03 ஆம் திகதி காலப்பகுதியில் பொலிஸ் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நபர் கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். எப்பாவெல தொழிற்சாலைக்கு சென்று அங்கிருந்த உத்தியோகஸ்த்தர்களை தாக்கினார்.

முறையற்ற வகையில் செயற்பட்டு, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 786 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் கலக்கமடைந்து உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள்.

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் எனக்கு பெயர் குறிப்பிடாத கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அக்கடிதத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களை அரசியல்வாதிகள் பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் தற்றுணிவு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கடந்த காலங்களில் ஜனாதிபதி, அமைச்சர் என்று பலருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது'

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

பெயர் குறிப்பிடப்படாத கடிதத்தால் நான் அதனை பெரிதாக கவனத்திற் கொள்ளவில்லை. இருப்பினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயுமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினேன்

.அதற்கமைவாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டம் எட்டபிட்டிய திக்வெல்ல ' டிஸ்லேன்ட்' பங்களாவில் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமான முறையில் இருந்துள்ளார்.

அதேபோல் கடந்த அரசாங்கத்தில் ஆளும் மற்றும் எதிர் என்று அனைத்து பக்கங்களிலும் இருந்த வடிவேல் சுரேஸ் பதுளை ஹாலி எல பகுதியில் பெருந்தோட்டத்துக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 19 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

உண்மையை அறியாத மக்கள்

ஆனால் இவ்விருவரும் தமது சொந்த பங்களாவில் வாழ்வதாக தான் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டார்கள். அவர்களும் உண்மையை அறியவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை | Anura Govt S Action Against Senthil Vadivel Suresh

இதற்கமைய செந்தில் தொண்டமானுக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ' தற்போதைய அரசாங்கத்திடம் ஏதும் முடியாது.' என்று குறிப்பிட்டுக் கொண்டு பங்களாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

19 ஆண்டுகளாக வசிக்கும் பங்களாவில் தனக்கு சட்ட உரிமை உள்ளது என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டு 1 வாரம் காலவகாசம் கோரியிருந்தார். அவருக்கு காலவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது உரிமையை நிரூவிக்கவில்லை. பின்னர் பங்களாவில் இருந்து வெளியேறினார்’’ என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US