பழிவாங்கும் நடவடிக்கையையே முன்னெடுக்கின்றது அநுர அரசு! தலதா அத்துகோரள பகிரங்க குற்றச்சாட்டு
நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய அரசு அரச நிறுவனங்களுக்குத் தமக்குச் சாதகமானவர்களைத் தலைவர்களாக நியமித்து, அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது.
தேவையற்ற விதத்தில் அனைவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முக்கிய விசாரணை
ஜனநாயகக் கட்டமைப்புக்கு உட்பட்டு அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையாலேயே, 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்களால் அதிகாரத்துக்கு வர முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதியில் இந்த அரசின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எதனையும் காண முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பைக் கொண்டு வந்து, நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போதிலும், ஒரு வருடமாகியும் சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க இந்த அரசால் முடியவில்லை.
நீதிமன்றமும், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தற்போது பல முக்கிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அநுரவின் ஆட்சியை வீழ்த்தவே முடியாது -எதிரணிகளின் சதித்திட்டம் வெறும் பகற்கனவு மட்டுமே! ஆதம்பாவா எம்.பி. முழக்கம்
குற்றப்பத்திரிகை தாக்கல்
தற்போதைய அமைச்சரவையில் அங்கத்தவராக இருக்கும் குமார ஜயகொடிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தீர்ப்பை நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நீதித்துறையின் மீதான கௌரவத்துடனும், அதன் சுதந்திரம் பேணப்படும் என்ற நம்பிக்கையுடனும் இந்த வழக்கு நடவடிக்கைகள் சரியாக முன்னெடுக்கப்பட்டுச் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.
இலங்கை வரலாற்றில் அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காகப் பணியாற்றியுள்ளன.
நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் இந்த வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri