ராஜபக்சர்களின் கோட்டையை சரித்த அநுர
நடைபெற்று முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல எதிர்மறையான முடிவுகள் வந்துள்ள நிலையில் இந்த விடயம் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜபக்சர்களின் கோட்டையான மெதமுலன தொகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ராஜபக்சர்களின் கோட்டை
இதன்மூலம் ராஜபக்சர்களின் சொந்த தொகுதியில் கூட மக்களின் ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுலன தொகுதியில் 1,115 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.
மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 768 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
மெதமுலனவில் ராஜபக்ச குடும்பத்தினர் நீண்ட காலமாக அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், இந்தத் தேர்தலில் அவர்கள் அதற்கான ஆணையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவொரு ஆரம்பம்
அதேவேளை நாடாளவிய ரீதியில் ராஜபக்சர்களின் கட்சி பெற்ற வாக்கு வீதம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில் இதுவொரு ஆரம்பம் என நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச இன்று சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam