பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டம் ஆரம்பம்(Photos)
காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது நேற்று(17) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து இடும் வேலைத்திட்டம்

குறித்த கையெழுத்து இடும் செயற்பாடானது நேற்றையதினம் திருகோணமலை மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் சுகீர்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் எஸ்.குகதாஸன்,
மாவட்ட கிளையின் பொருளாளர் வீ.சுரேஸ்குமார் மற்றும் கட்சியின்
முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan