வவுனியாவில் இடம்பெற்ற புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் (25) வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நடைபவனி ஈரப்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயத்தில் இருந்து ஏ9 பிரதான வீதி ஊடாக வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை வரை இடம்பெற்றது.
புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் முகமாகவும், பாடசாலை சூழலில் புகைத்தலுடன் தொடர்புபட்ட பொருட்களின் விற்பனையை தடை செய்யும் முகமாகவும் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
‘புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கும் பொது மக்களுக்கு புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
அத்துடன், தெற்கு சிங்கள பிரதேச சபையில் புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் காட்சி படுத்தப்பட்ட விழிப்புணர்வு பதாதை சிங்களபிரதேச சபை தவிசாளரான தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சுதர்சன சாமர வீரக்கோனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் புகைத்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளையும் விற்பனை செய்வதற்கு எதிரான தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வு பேரணியில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் தவிசாளர் சுதர்சன சாமர வீரக்கோன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை சுகாதார வைத்திய அதிகாரி யூட்பிரிஸ், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உத்தியோகதாதர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், பரக்கும் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 16 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
