பாணந்துறையில் சிக்கிய முன்னாள் அரசியல்வாதியின் சட்டவிரோத அதி சொகுசு வாகனங்கள்!
மேல் மாகாணத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வாகனங்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், இராணுவ ஜீப் போன்ற வாகனம் ஒன்று காணப்படுவதாகவும், அது வெளிநாடுகளில் உள்ள ஆயுதப்படையினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு சொகுசு ஜீப் வண்டிகள்
இந்நிலையில், ரத்மலானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஒருங்கினைக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த வாகனங்கள் அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
