பொருளாதார நிபுணர் வெளியிட்டு முக்கிய தகவல் - கலக்கத்தில் இலங்கை மக்கள்
இலங்கையின் தற்போதைய நிலைமை காரணமாக பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் வணிகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவடைந்து செல்கின்றமை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என என அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 வீதமாக உள்ள நிலையில், அது 20 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேராசிரியர் ஜனக் குமாரசிங்க குறிப்பிட்டார்.
சமகால அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் விலை அதிகரிப்புகள் ஏற்படுமாயின் பட்டினி மரணங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
