பதவியிலிருந்து விலகிய மற்றுமொரு அரசாங்க உறுப்பினர்!
கொத்மலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக செயற்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
6.9 மில்லியன் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தின் கீழ் பதவியை வகிக்கத் தயாராக இல்லாததால் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஓரங்கட்டுவதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது இராஜினாமா கடிதம் ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
