கோவிட் தொற்றால் ஏற்படப்போகும் மற்றொரு ஆபத்து - அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை
கோவிட் தொற்றால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக 416 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காசநோய் என்பது நுரையீரலை பாதிக்ககூடிய பக்டீரியா கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோயாகும். இந்த நோயால் உலக முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்க்கு எதிராக போராடி வரும் இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தஜிகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய 7 நாடுகளுக்கு 416 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,