முல்லைத்தீவில் மேலுமொரு கோவிட் மரணம் பதிவு
முல்லைத்தீவு - மணற்குடியிருப்பினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு, மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர்களால் இவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு பி.சிஆர் பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா எடுத்துச்செல்லப்படவுள்ளது.
மணற்குடியிருப்பில் இவர் வாழ்ந்த இடம், இவருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
