மன்னாரில் மேலும் ஒரு கோவிட் மரணம் பதிவு - வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் இன்று காலை மேலும் ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரையிலான 13 நாட்களில் 220 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1244 கோவிட் தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1261 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




