நாட்டில் மேலும் 71 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 71 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (21-06-2021) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 71 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரையில் 2704 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 13 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 57 மரணங்களும் பதிவாகியுள்ளன.