நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (29-07-2021) இந்த கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 30 முதல் 59 வயது வரையிலான 15 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் 38 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4380 ஆகும்.