வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மேலும் 23 இலங்கையர்கள்
வியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் படகு ஒன்றிலிருரந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படகு மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட குழு நாடு கடத்தல்
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
கடந்த 19ம் திகதி நாடு கடத்தப்பட்ட மேலும் 23 பேரில் ஆறு பெண்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.