வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின.
அதனடிப்படையில் வவுனியா மில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்ப்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.