ஓமானில் இருந்து மேலும் 14 பெண்கள் நாடு திரும்பினர்
ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு சென்று இலங்கை திரும்ப முடியாமல் இருந்த 14 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பிய பெண்களில் 8 பேர் நாடு கடத்தப்பட்டவர்கள்
இந்த பெண்களின் ஆறு பேர் ஓமானில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி நிலையில், மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் 8 பெண்கள் தாம் பணியாற்றிய வீடுகளில் சிறிய தவறுகளை செய்த குற்றத்திற்காக ஓமான் தொழில் நீதிமன்றத்தினால், நாடு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு திரும்ப பெண்களில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்கள் மஸ்கட் நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான மூலம் இன்று அதிகாலை 4.50 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பெண்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்த வேலை வாய்ப்பு பணியகம்
விமான நிலையத்தை வந்தடைந்த பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொறுப்பேற்ற பின்னர், அவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பி வைக்கப்படும் இலங்கை பெண்கள், அங்கு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற பல பெண்கள் அந்நாட்டில் பலவேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன் News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
