வாகன இறக்குமதி - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் ஆண்டில் இலங்கையில் வாகன இறக்குமதிக்காக அதிகளவிலான அந்நியச் செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக முன்னதாகக் கணிக்கப்பட்ட 1.5 பில்லியன் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக, தலா 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான அதிகளவிலான இறக்குமதி காரணமாக, வாகன இறக்குமதி வரி மற்றும் தீர்வுகள் மூலம் திறைசேரிக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (முதலாம் காலாண்டில்) மட்டும் வாகன இறக்குமதிக்காக ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மொத்த வாகன இறக்குமதிச் செலவு
தற்போது நிலவும் இதே போக்கு இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடருமானால், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த வாகன இறக்குமதிச் செலவு தோராயமாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.

இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த செலவினத்தையும் விட அதிகமாகும். நிதி அமைச்சானது கடந்த ஆண்டை விடவும் 2026இல் வாகன இறக்குமதி குறையும் என்றே கணித்திருந்தது. எனினும் தற்போதைய தரவுகள் அந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டி இறக்குமதி அதிகரிக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், இந்த வாகன இறக்குமதி அதிகரிப்பானது அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளில் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறி எதுவும் தற்போது வரை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri