நாட்டில் வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் நாளைய தினமும்(12), நாளை மறுதினமும்(13) சுழற்சிமுறையில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலய பகுதிகளில், காலை10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன், நாளை மறுதினம்(13) P,Q,R,S,T,U,V,W ஆகிய வலய பகுதிகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



